
10th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு
- தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், ஆளுநர் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடமே, தான் பதவியேற்ற அதே மேடையில் மக்கள் முன்னிலையில் மூன்று மிக முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திட்டுத் தனது அதிரடி ஆட்சியைத் தொடங்கியுள்ளார்.
- முதலமைச்சரின் முதல் கையெழுத்து தமிழக மக்களின் மின்சாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை அவர் அமல்படுத்தியுள்ளார்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், மாநிலம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" (Singapen Special Task Force) என்ற புதிய பிரிவை உருவாக்கும் கோப்பில் முதல்வர் இரண்டாவது கையெழுத்திட்டார்.
- தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க, ஒரு பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படையை (Anti-Narcotics Force) உருவாக்கும் கோப்பில் மூன்றாவது கையெழுத்திட்டார்.
- மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.
- பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் முன்னிலையில், அவர் வங்காள மொழியில் பதவியேற்றார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; மேலும் அவற்றை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக ஹைதராபாத் அடைந்துள்ள மாற்றமிகு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

