
9th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்
- 'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு.தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.
- மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
- இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும்.
- தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தற்போது 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் இதற்கான அறிவிப்பைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி வெளியிட்டார்.
- தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் களம் கண்டனர்.
- அதிமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) மற்றும் திமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) என 6 பேர் போட்டியிட்டிருந்தனர்.
- இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், பிரதான கட்சிகளைச் சேர்ந்த மேற்கண்ட 6 பேரின் மனுக்கள் மட்டுமே முறைப்படி இருந்தன. மற்ற 6 பேரின் மனுக்கள் தகுதியற்றவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டன.
- வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இவர்கள் 6 பேரும் "போட்டியின்றித் தேர்வு" செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
- தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், தம்பிதுரை, சுதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் நேரில் வந்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

