
8th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
- தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சரோஜனி நகரில் பொதுக் குடியிருப்புத் திட்டத்தில், பெண் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
- இதைத் தொடர்ந்து, 12.3 கி.மீ. நீளமுள்ள மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் (இளஞ்சிவப்பு) மெட்ரோ வழித்தடத்தையும், 9.9 கி.மீ. நீளமுள்ள தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் (மெஜந்தா) மெட்ரோ வழித்தடத்தையும் மோடி தொடக்கி வைத்தார்.
- புராரி, ஜகத்பூர்-வஜீராபாத், காஜூரி காஸ், பஜன்புரா, யமுனை விஹார் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு தில்லி பகுதிகளுக்கு இந்த மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் வழித்தடம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும்.
- அதேபோல், தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் உயர்நிலை மெட்ரோ வழித்தடம் மதுபன் சௌக், உத்தர் பீதம்புரா-பிரசாந்த் விஹார், ஹைதர்பூர் பட்லி மோர், பாலாஸ்வா உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ இணைப்பை மேம்படுத்தும்.
- மெட்ரோ விரிவாக்கத்துக்கு அடிக்கல்: மெட்ரோ விரிவாக்கம் பகுதி 5-ஏ திட்டத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- ராமகிருஷ்ணா ஆசிரம் மார்க்-இந்திரபிரஸ்தா, ஏரோசிட்டி-இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 மற்றும் துக்ளகாபாத்-கலிந்தி குஞ்ஜ் ஆகிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.
- இவை மத்திய தில்லி, தெற்கு தில்லி, நொய்டா மற்றும் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.
- அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இது டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் நியூசிலாந்து களமிறங்கியது. நியூசிலாந்து அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது.
- இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

