
11th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025 அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு
- காலாண்டு காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது.
- நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம், 2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- கிராமப்புறங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலட்டத்தில் 4.4 சதவீதமாக இருந்தது.
- இதன்மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.
- 2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நகர்ப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 63.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 62.8 சதவீதமாக இருந்தது.
- இதேபோன்று கிராமப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 39.7 சதவீதமாக உள்ளது. இதுவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 39.3 சதவீதமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

