
2025 உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ரவீந்தர்
- எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
- மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ஹியோஜின் 255 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், சீனாவின் வாங் ஜிஃபி 254 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
- அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், மேகனா சஜ்ஜனார், ஸ்ரேயா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1893.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

