Type Here to Get Search Results !

1st NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


1st NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

விலையில்லா மடிக்கணினி வழங்க ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
  • தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு மடிக்கணினியை ரூ.21,650-க்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது. 
  • முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கிய எல்காட் நிறுவனம். மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.
தாயுமானவர் திட்ட வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்வு
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
  • அதில் ஒன்றாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கு நேரடியாக வழங்கும் தாயுமானவர் திட்டம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. 
  • தற்போது, இந்தத் திட்டத்தில் வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மேலும் பல முதியோர் பயனடைய உள்ளனர்.
அக்டோபர் 2025 மாத ஜிஎஸ்டி வசூல் 1.95 லட்சம் கோடி
  • மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, நாடு முழுவதும் அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
  • அந்தவகையில், அக்டோபர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.195.936 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இது கடந்தாண்டு 2024 அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியைத் தாண்டி வருகிறது.
  • இதனிடையே ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பொருள்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel