Type Here to Get Search Results !

17th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மாஹே-வின் சின்னம் அறிமுகம்
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான மாஹே-வின் சின்னத்தை இந்திய கடற்படை அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
  • கடற்படை கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்துவரும் தற்சார்பை கொண்டாடும் வகையில், வடிவமைப்பு முதல் செயல்பாடு வரையிலான கப்பல் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
  • இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கடலோர நகரமான மாஹேவின் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவின் நீடித்த கடல்சார் மரபுகளையும் கடலோர உணர்வையும் பிரதிபலிக்கிறது.
  • கப்பலின் சின்னம், இந்தப் பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் தற்காப்பு மரபிலிருந்து உத்வேகம் பெறுகிறது. களரிப்பயட்டுவுடன் தொடர்புடைய மற்றும் கேரளாவின் தற்காப்பு பாரம்பரியத்தின் சின்னமாக இருக்கும் உருமி என்ற நெகிழ்வான வாள் கடலில் இருந்து எழுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 
  • சுறுசுறுப்பு, துல்லியம் மற்றும் கடும் தாக்குதல் ஆகியவற்றைக் உருமி குறிக்கிறது, இது கப்பலின் விரைவான செயல்பாட்டினையும் தீர்க்கமாகத் தாக்கும் திறனையும் பிரதிபலிக்கிறது.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, புதுமை கண்டுபிடிப்புடன் கூடிய மற்றும் தற்சார்புடன் கூடிய இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இக்கப்பலின் சின்னம் பிரதிபலிக்கறது.
பால்வளத்துறையின் தேசிய கோபால் ரத்னா விருது 2025
  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, 2025-ம் ஆண்டுக்கான தேசிய கோபால் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இது கால்நடை மற்றும் பால்வளத்துறையின் மிக உயரிய தேசிய அளவிலான விருதாகும்.
  • தேசிய பால்வள தினத்தையொட்டி 2025 நவம்பர் 26 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இவ்விருதுகளை வழங்க உள்ளார். இவ்விருதுகளுக்காக இந்த ஆண்டு மொத்தம் 2081 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
  • மொத்தம் 3 பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. நாட்டு மாடுகளை வளர்க்கும் சிறந்த பால் உற்பத்தியாளர், சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு மற்றும் சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பவியளாலர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
  • சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு பிரிவில் வடகிழக்கு பிராந்தியம் அல்லாத வகையில், தமிழ்நாட்டில் அரியலூரில் உள்ள டி.ஒய்.எஸ்.பி.எல். 37 செந்துறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்க நிறுவனத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது. அந்நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel