
ஆணவப் படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே 1ஏ போர் விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது. இந்தியா விமானப்படைக்காக ரசால், விராட் போன்ற விமானங்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது.
- இதற்காக வெளிநாடுகளில் இருந்து இன்ஜின்கள் வரவழைக்கப்பட்டு, பொருத்தப்பட்டு மற்ற பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்தகைய விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிக் விமானங்கள் தற்போது நீண்டகாலமாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்புவதற்கு தேஜஸ் எம்கே 1ஏ ரக விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.