Type Here to Get Search Results !

15th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஐஎம்எஃப் கணிப்பு
  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது 6.6% ஆக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அதேவேளையில், 2026- 27 நிதியாண்டுக்கான வளர்ச்சி 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாகவும் கணித்துள்ளது.
  • முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி உலக வங்கி கணித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
  • 4.8 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா 2ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 0.2 விழுக்காடு, ரஷ்யா 0.6 விழுக்காடு,பிரான்ஸ் 0.7 விழுக்காடு, ஜப்பான் 1.1 விழுக்காடு, பிரிட்டன் 1.3 விழுக்காடு, அமெரிக்கா 2 விழுக்காடு வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • வரும் நிதியாண்டில் வளர்ச்சிக் குறித்த கணிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் முன்னிலையில் உள்ள நிலையில் சீனாவும், நைஜீரியாவும் தலா 4.2 விழுக்காடு வளர்ச்சியுடன் 2ம் இடத்தில் உள்ளன. 
  • அமெரிக்கா 2.1 விழுக்காடு,பிரிட்டன் 1.3 விழுக்காடு, ரஷ்யா 1 விழுக்காடு, ஜெர்மனி 0.9 விழுக்காடு, பிரான்ஸ் 0.9 விழுக்காடு, ஜப்பான் 0.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.
ஐந்தாவது இந்திய இந்தோனேஷிய கூட்டுப்பயிற்சி சமுத்ரா சக்தி 2025
  • இந்திய கடற்படை, இந்தோனேஷிய கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளும் இருதரப்பு கூட்டுப்பயிற்சியின் ஐந்தாவது பதிப்பான சமுத்ரா சக்தி-2025 விசாகப்பட்டினத்தில் 2025 அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டி, இந்தோனேஷிய கடற்படையின் கேஆர்ஐ ஜான் லி போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன. 
  • இருதரப்பு கப்பல் பயணம், கூட்டு யோகா அமர்வுகள், நட்பு ரீதியிலான விளையாட்டுகள், நிபுணர்களின் கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன.
  • கடல் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் இயக்குதல், விமானப் பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான நிதியுதவி நூறு சதவீதம் அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
  • முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான நிதியுதவியை நூறு சதவீதம் அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • நிரந்தர வருவாய் இல்லாத மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 65-க்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு வறியோர் நிதியுதவியாக மாதாந்திர நிதியுதவி ரூ.4000-த்திலிருந்து ரூ.8000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் விதவைகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உடையவர்களுக்கு (1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) கல்வி நிதியுதவி மாதந்தோறும் ரூ.1000-லிருந்து, ரூ.2000- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • திருமண நிதியுதவி ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களின் 2 மகள்கள், விதவை மறுமணம் மற்றும் இந்த உத்தரவுக்குப் பிந்தைய திருமணத்திற்கும் இது பொருந்தும்.
  • இந்தத் திருத்தப்பட்ட விகிதங்கள் 2025 நவம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும். ஆயுதப்படையினர் கொடி நாள் நிதியத்தில் இடம்பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் நலநிதி மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.257 கோடி செலவாகும்.
  • முன்னாள் படைவீரர்களின் தியாகம் மற்றும் சேவையை கவுரவிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப குறைந்த வருவாய் உடைய மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சமூகப் பாதுகாப்பை இம்முடிவு வலுப்படுத்துகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel