Type Here to Get Search Results !

29th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்நது முதலிடம் வகிக்கிறது
  • உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து, உலகளாவிய விநியோகத்தில் சுமார் கால் பங்கு பங்களிப்பை அளிக்கிறது. 
  • தற்போது இந்தியாவில் பால் உற்பத்தி மிகப்பெரிய வேளாண் உற்பத்தியாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 5 சதவீத பங்களிப்பையும் அளிக்கிறது. 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  • பால் உற்பத்தி 10 ஆண்டுகளில் 63.56 சதவீதம் அதிகரித்து, 146.3 மில்லியன் டன்னில் இருந்து 239.30 மில்லியன் டன்னாக அதிகரித்து உள்ளது. ஒரு நபருக்கான பால் விநியோகம் 48 சதவீதம் அதிகரித்து, 2023 – 24-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 471 கிராமிற்கு அதிகமாக இருந்தது. 
  • இது உலக சராசரியில் நாள் ஒன்றுக்கு 322 கிராமாகும்.  2024 – 25-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 565.55 லட்சம் செயற்கை கருவூட்டல் நடைபெற்றது.
  • பால் என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பின் மையமாக திகழ்கிறது. தரமான புரதச் சத்தையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது. இது சுமார் முழு உணவாக கருதப்பட்டு, புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை அளிக்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக குழந்தைப் பருவத்திற்கு இது அவசியத் தேவையாகும்.
  • இந்தியாவில் கூட்டுறவு பால்வளத்துறை விரிவானதாகவும், சிறந்த அமைப்பை உடையதாகவும் உள்ளது. 2025-ம் ஆண்டில் 22 பால்வள கூட்டமைப்புகளும், 241 மாவட்ட கூட்டுறவு யூனியன்களும், 28 பால்வள சந்தைகளும், 25 பால் உற்பத்தியாளர் சங்கங்களும் உள்ளன.
  • 2.35 லட்சம் கிராமங்களில், 1.72 கோடி பால் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் பண்ணை ஊழியர்களில் சுமார் 70 சதவீதம் பேரும், பால் கூட்டுறவுகளில் 35 சதவீதம் பேரும் பெண்களாகவும் உள்ளனர். 
  • நாடு முழுவதும் கிராம அளவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை தலைமையாக கொண்ட பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
ஆசிய கோப்பை 2025 - இந்திய சாம்பியன்
  • ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலபரீட்ச்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
  • இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
  • இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமாடியது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. 
  • இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
  • இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் மாற்று இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களான அபிஷேக், குல்தீப், திலக் வர்மா, துபே ஆகியோர் மொத்தமாக 7 விருதுகளை வென்று அசத்தினர். 
  • அதன்படி, ஆட்டத்தின் நாயகன் விருதை திலக் வர்மா வென்று அசத்தினார். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரர் விருதை சிவம் துபே வென்றார்.
  • இதேபோல், தொடரின் நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை குல்தீப் யாதவும் வென்று அசத்தினர். 
  • மேலும், அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான விருதை அபிஷேக் சர்மாவும், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான விருதை குல்தீப் யாதவும், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரருக்கான விருதை மீண்டும் அபிஷேக் சர்மாவும் வென்றனர்.
  • இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பை மற்றும் பதக்கங்களை வாங்க இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel