
27th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
- ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
- நாடு முழுவதும் எட்டு ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய மாணவர்கள் படிப்பதற்கான திறன் கொண்டதாக இது அமைய உள்ளது.
- மேலும் சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கி.மீ மேம்பாலத்தையும் அவர் திறந்துவைத்தார்.
- இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.
- இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
- இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.
- ஜெய்ப்பூர் வர்த்தக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உலக உணவு இந்தியா 2025 மாநாட்டின் நான்காவது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 25 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
- உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வு, இந்தியாவை மீண்டும் உலகின் உணவு மையமாக நிலைநிறுத்தியதுடன், உணவு பதப்படுத்துதலில் அதன் தலைமையை வலுப்படுத்தியது.
- மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமர், அங்கு உள்ள கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டார், ஊட்டச்சத்து, எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல், உணவைப் பெட்டிகளில் அடைக்கும் போது சுகாதார அம்சங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து திருப்தி தெரிவித்தார்.
- ரஷ்யாவின் துணைப் பிரதமர் திரு டிமிட்ரி பட்ருஷேவ், மத்திய அமைச்சர்கள் திரு சிராக் பாஸ்வான், திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்து, வியட்நாம், ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளின் அமர்வுகளும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், உலக வங்கி ஆகியவற்றால் நடத்தப்பட்ட அமர்வுகளும் நடைபெற்றன.
- கூடுதலாக, இந்த ஆண்டு பதிப்பின் ஐந்து மையத் தூண்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உணவு, ஊட்டச்சத்து மருந்துகள், சிறப்பு உணவுகள், தாவர அடிப்படையிலான உணவுகள் போன்ற முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய பதின்மூன்று அமர்வுகளை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நடத்தியது.
- ரூ. 25,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இரண்டு நாட்களில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டியது.
- மாநாட்டின் ஒரு பகுதியாக, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. உலக உணவு இந்தியா மாநாட்டுடன், மேலும் இரண்டு சர்வதேச மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.