
22nd SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை ஒன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்று' செல்போன் செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த செயலி பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே 'கியூ.ஆர்.' பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கங்களை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயண பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
- இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 'சென்னை ஒன்று' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.
- இனி பொதுமக்கள் பயணச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார், தொடங்கி வைக்கிறார்.
- அப்பகுதியில் பரந்த நீர்மின் திறனைப் பயன்படுத்தி, நிலையான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இட்டாநகரில் ரூ.3,700 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
- ஹியோ நீர்மின் திட்டம் (240 மெகாவாட்) மற்றும் டாடோ-ஐ நீர்மின் திட்டம் (186 மெகாவாட்) ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தின் சியோம் துணைப் படுகைப் பகுதியில் உருவாக்கப்படும்.
- தவாங்கில் அதிநவீன மாநாட்டு மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தவாங் எல்லை மாவட்டத்தில் 9,820 அடிக்கு மேல் அமைந்துள்ள இந்த மையம், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், கலாச்சார விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான ஒரு மைல்கல் வசதியாக செயல்படும். 1,500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை நடத்தும் திறன் கொண்ட இந்த மையம், உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் மற்றும் பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சார திறனை ஆதரிக்கும்.
- இணைப்பு, சுகாதாரம், தீ பாதுகாப்பு, பணிபுரியும் பெண்கள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவை செய்யும் வகையில், ரூ.1,290 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்த முயற்சிகள் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளன. அதேவேளையில், பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என்பதையும் அந்த நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

