Type Here to Get Search Results !

13th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
  • மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே. சிங், முதலமைச்சர் திரு லால்துஹோமா, மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்ளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • மணிப்பூரில் உள்ள சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதியதிட்டங்களுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் நிலம் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் பூமி என்று குறிப்பிட்டார். மணிப்பூர் மக்களின் உற்சாகத்திற்கு வணக்கம் செலுத்திய திரு. மோடி, அதிக எண்ணிக்கையில் வந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
  • ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கட்டுவதற்கான நாடு தழுவிய திட்டத்தில்,  மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 60,000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 
  • சுமார் ரூ 3,000 கோடி சிறப்புத் தொகுப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,  இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • மணிப்பூர் மாநிலம்  இம்பாலில் இன்று ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 
  • கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று  தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 
  • இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் என்றும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூர் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
  • 21-ம் நூற்றாண்டில்,  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற  இலக்கை அடைய மணிப்பூரின் வளர்ச்சி தேவை.  மணிப்பூர் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்தது என்று பிரதமர் தெரிவித்தார்.  வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நிலைத்திருப்பது அனைவரின் கூட்டுக் கடமை என்று அவர் கூறினார். 
  • மணிப்பூர் இந்தியாவின் வளர்ச்சியின் சக்திவாய்ந்த மையமாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்தார். மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை 2025 - தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
  • தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங் (20 வயது) சீனாவில் நிங்போ விளையாட்டு திடலில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் நட்சத்திர வீராங்கனை யாங் சியான்சூனைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று தங்கம் வென்றார்.
  • உலகக் கோப்பையில் இது ஈஷாவின் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ஈஷா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்திருக்கிறார். ஒலிம்பிக் பதக்கம் பெற்ற தென் கொரியாவின் ஒ யெஜின் வெண்கலம் வென்றார்.
  • ஈஷாவின் தங்கப் பதக்கத்தால் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. சீனா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel