
10th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது.
- 82.400 கி.மீ. நீளத்திற்கு ரூ.4,447.38 கோடி முதலீட்டுச் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரிவு பாகல்பூருடன் இணைக்கும் மொகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமல்பூர், முங்கர் போன்ற முக்கியமான பிராந்திய நகரங்கள் வழியாகச் செல்கிறது அல்லது அவற்றுக்கான போக்குவரத்து இணைப்பிற்கு வகைசெய்கிறது.
- இந்த நான்கு வழிச்சாலை மூலம் பயண நேரம் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும். அதே நேரத்தில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற போக்குவரத்தை அளிக்கும்.
- 82.40 கிமீ நீளமுள்ள இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14.83 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பையும், 18.46 லட்சம் மனித நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இந்த வழித்தடத்தின் அருகே பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் போது கூடுதல் வேலைவாய்ப்புகளும் ஏற்படும்.
- பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை (177 கி.மீ) ரூ.3,169 கோடி செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- மேம்படுத்தப்படும் இந்த வழிப்பாதையின் மூலம் இந்திய ரயில்வேயின் இயக்கம் மேம்படும். மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சேவை, நம்பகத்தன்மையை இது வழங்கும். இந்த பல்தட திட்டம் நடவடிக்கைகளை எளிதாக்கி பயணிகளின் நெரிசலைக் குறைக்கும்.
- இத்திட்டம் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தியோகர் (பாபா பைத்யநாத் கோயில்), தாராபித் (சக்தி பீடம்) போன்ற முக்கிய பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கும்.
- மூன்று முன்னோடி மாவட்டங்களில் (பங்கா, கோடா, தும்கா) சுமார் 28.72 லட்சம் மக்கள் வசிக்கும் சுமார் 441 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.