Type Here to Get Search Results !

10th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது. 
  • 82.400 கி.மீ. நீளத்திற்கு ரூ.4,447.38 கோடி முதலீட்டுச் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரிவு பாகல்பூருடன் இணைக்கும் மொகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமல்பூர், முங்கர் போன்ற முக்கியமான பிராந்திய நகரங்கள் வழியாகச் செல்கிறது அல்லது அவற்றுக்கான போக்குவரத்து இணைப்பிற்கு வகைசெய்கிறது.
  • இந்த நான்கு வழிச்சாலை மூலம் பயண நேரம் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும். அதே நேரத்தில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற போக்குவரத்தை அளிக்கும்.
  • 82.40 கிமீ நீளமுள்ள இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14.83 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பையும், 18.46 லட்சம் மனித நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இந்த வழித்தடத்தின் அருகே பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் போது கூடுதல் வேலைவாய்ப்புகளும் ஏற்படும்.
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை (177 கி.மீ) ரூ.3,169 கோடி செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேம்படுத்தப்படும் இந்த வழிப்பாதையின் மூலம் இந்திய ரயில்வேயின் இயக்கம் மேம்படும். மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சேவை, நம்பகத்தன்மையை இது வழங்கும். இந்த பல்தட திட்டம் நடவடிக்கைகளை எளிதாக்கி பயணிகளின் நெரிசலைக் குறைக்கும்.
  • இத்திட்டம் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தியோகர் (பாபா பைத்யநாத் கோயில்), தாராபித் (சக்தி பீடம்) போன்ற முக்கிய பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கும். 
  • மூன்று முன்னோடி மாவட்டங்களில் (பங்கா, கோடா, தும்கா) சுமார் 28.72 லட்சம் மக்கள் வசிக்கும் சுமார் 441 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel