
30th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
- உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,120 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சன்னிகஞ்ச் மெட்ரோ நிலையம் முதல் கான்பூர் மத்திய மெட்ரோ நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
- யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொகுதி 28 - ல் 220 கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- பெருநகர நொய்டாவில் உள்ள ஈக்கோடெக் - 8 மற்றும்ஈக்கோடெக் -10 - ல் ரூ.320 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 132 கிலோவாட் துணை மின்நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
- உத்தரபிரதேச மாநிலத்தின் எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் கான்பூரில் ரூ.8,300 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள 660 மெகாவாட் பங்கி அனல் மின் விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
- பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ஔரங்காபாத் மாவட்டத்தில் ரூ.29,930 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு (3x800 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- தேசிய நெடுஞ்சாலை - 22 - ல் சுமார் ரூ.5,520 கோடி மதிப்பிலான பாட்னா - கயா - தோபி பிரிவின் நான்கு வழிச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை - 27 - ல் உள்ள கோபால்கஞ்ச் நகரில் உயர்மட்ட நெடுஞ்சாலையின் நான்கு வழித்தடங்களையும், தரம் உயர்த்தப்பட்ட சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும், அதே ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது.
- அதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.
- 2024-25-ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக அதிகரித்துள்ளது. இது ஆண்டின் மிக வேகமான காலாண்டு வளர்ச்சியாகும்.
- 3-ஆம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருந்தது. இருப்பினும், 2024-25-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டின் வளர்ச்சி, முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டில் காணப்பட்ட 8.4%-ஐ விட குறைவாகும்.
- வேளாண்மை, கால்நடைகள், மீன்பிடித்தல் துறை நான்காவது காலாண்டில் 5.4% வளர்ச்சியடைந்தது. இது 2023-24-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.9% ஆக இருந்தது.
- உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.8% ஆக இருந்தது. இது ஆண்டின் இரண்டாவது வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். இது முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில் 11.3% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
- நான்காவது காலாண்டில் கட்டுமானத் துறை இரட்டை இலக்க வளர்ச்சியை 10.8% ஆக மீண்டும் எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் வேகமான வளர்ச்சியாகும்.
- மேலும், 2023-24 ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் காணப்பட்ட 8.7% ஐ விட இது அதிகம். இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2024-25 நிதியாண்டில் ரூ. 187.97 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24-ல் ரூ.176.51 லட்சம் கோடியாக இருந்தது.