Type Here to Get Search Results !

30th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,120 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சன்னிகஞ்ச் மெட்ரோ நிலையம் முதல் கான்பூர் மத்திய மெட்ரோ நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
  • யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொகுதி 28 - ல் 220 கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • பெருநகர நொய்டாவில் உள்ள ஈக்கோடெக் - 8 மற்றும்ஈக்கோடெக் -10 - ல் ரூ.320 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 132 கிலோவாட் துணை மின்நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். 
  • உத்தரபிரதேச மாநிலத்தின் எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் கான்பூரில் ரூ.8,300 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள 660 மெகாவாட் பங்கி அனல் மின் விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பீகாரின் காராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
  • பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ஔரங்காபாத் மாவட்டத்தில் ரூ.29,930 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு (3x800 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • தேசிய நெடுஞ்சாலை - 22 - ல் சுமார் ரூ.5,520 கோடி மதிப்பிலான பாட்னா - கயா - தோபி பிரிவின் நான்கு வழிச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை - 27 - ல் உள்ள கோபால்கஞ்ச் நகரில் உயர்மட்ட நெடுஞ்சாலையின் நான்கு வழித்தடங்களையும், தரம் உயர்த்தப்பட்ட சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) - 6.5% வளர்ச்சி
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும், அதே ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது. 
  • அதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5% ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24 நிதியாண்டில் 9.2% ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.
  • 2024-25-ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக அதிகரித்துள்ளது. இது ஆண்டின் மிக வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். 
  • 3-ஆம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருந்தது. இருப்பினும், 2024-25-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டின் வளர்ச்சி, முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டில் காணப்பட்ட 8.4%-ஐ விட குறைவாகும்.
  • வேளாண்மை, கால்நடைகள், மீன்பிடித்தல் துறை நான்காவது காலாண்டில் 5.4% வளர்ச்சியடைந்தது. இது 2023-24-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.9% ஆக இருந்தது. 
  • உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.8% ஆக இருந்தது. இது ஆண்டின் இரண்டாவது வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். இது முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில் 11.3% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
  • நான்காவது காலாண்டில் கட்டுமானத் துறை இரட்டை இலக்க வளர்ச்சியை 10.8% ஆக மீண்டும் எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் வேகமான வளர்ச்சியாகும். 
  • மேலும், 2023-24 ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் காணப்பட்ட 8.7% ஐ விட இது அதிகம். இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2024-25 நிதியாண்டில் ரூ. 187.97 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24-ல் ரூ.176.51 லட்சம் கோடியாக இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel