
28th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
- பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்புத் தோழர், திராவிடர் மாணவ முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர்.
- இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.0 சதவீதமாக இருந்தது.
- 2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-)0.2 சதவீதம், 3.4 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் ஆகும்.
- ஐஐபி-யின் விரைவு மதிப்பீடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் 148.0 ஆக இருந்ததை விட 152.0 ஆக உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 130.6, 149.5 மற்றும் 214.4 ஆக உள்ளன.
- 2025 ஏப்ரல் மாதத்தில் முதல் மூன்று நேர்மறையான பங்களிப்பாளர்கள் - “அடிப்படை உலோகங்களின் உற்பத்தி” (4.9%), “மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் பகுதி அளவிலான டிரெய்லர்களின் உற்பத்தி” (15.4%) மற்றும் “இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தி” (17.0%) ஆகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டு சந்தைப் பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
- முந்தைய ஆண்டை விட அதிகபட்ச முழுமையான குறைந்தபட்ச ஆதரவு அதிகரிப்பு காட்டு எள்ளு விதை (குவிண்டாலுக்கு ரூ.820), ராகி (குவிண்டாலுக்கு ரூ.596), பருத்தி (குவிண்டாலுக்கு ரூ.589), எள் (குவிண்டாலுக்கு ரூ.579) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- செலவு என்பது பணிக்கு அமர்த்தப்பட்ட மனித உழைப்பு, காளை மாடுகளின் உழைப்பு / இயந்திர உழைப்பு, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு செலுத்தப்படும் வாடகை, விதைகள், உரங்கள் போன்ற பொருள் உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள், நீர்ப்பாசனக் கட்டணங்கள், கருவிகள் மற்றும் பண்ணை கட்டிடங்களின் மீதான தேய்மானம், பணி மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்களை இயக்குவதற்கான டீசல்/மின்சாரம், இதர செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு போன்ற அனைத்து செலுத்தப்பட்ட செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.
- நெல் (கிரேடு ஏ), சோளம் (மால்தண்டி) மற்றும் பருத்தி (நீண்ட தானியம்) ஆகியவற்றுக்கான செலவுத் தரவுகள் தனித்தனியாக தொகுக்கப்படவில்லை.
- 2025-26 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான 2018-19 மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு ஏற்ப உள்ளது.
- கம்பு (63%), அதைத் தொடர்ந்து மக்காச்சோளம் (59%), துவரம் பருப்பு (59%) மற்றும் உளுந்து (53%) ஆகியவற்றில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட லாப வரம்பு 50% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- வடிவமைத்து- கட்டுமானம் செய்து- நிதிவழங்கி- இயக்கி- மாற்றுதல் செய்யும் நடைமுறையுடன் ஆந்திரப்பிரதேசத்தில் பாட்வெல்-நெல்லூர் இடையே ரூ.3653.10 கோடி செலவில் 108.134 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- விசாகப்பட்டினம் – சென்னை தொழில்வழித்தடம், ஐதராபாத்-பெங்களூரு தொழில்வழித்தடம், சென்னை-பெங்களூரு தொழில்வழித்தடம் ஆகிய 3 முக்கியமான வழித்தடங்களுக்கு இணைப்பை ஏற்படுத்துவதாக பாட்வெல்-நெல்லூர் வழித்தடம் இருக்கும். இது நாட்டின் சரக்குப்போக்குவரத்து செயல்பாட்டு குறியீட்டில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பையும், 23 லட்சம் மனித நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இந்த வழித்தடத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக கூடுதல் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
- ரயில் வழித்தட திறனை மேம்படுத்துவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று இந்திய ரயில்வேயில் பயணிகள் மற்றும் பொருட்களின் தடையற்ற, விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இரண்டு பல்தடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
- ரத்லம்- நாக்டா 3-வது மற்றும் 4-வது பாதை, வர்தா- பலார்ஷா 4-வது பாதை ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.3,399 கோடியாகும் (தோராயமாக) மற்றும் இத்திட்டம் 2029-30 ஆண்டில் நிறைவு செய்யப்படும்.
- இந்த திட்டங்கள், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பல்மாதிரி போக்குவரத்திற்கான பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் விளைவாகும். மேலும் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற போக்குவரத்துக்கு வகை செய்யும்.
- மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும், இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பை சுமார் 176 கி.மீ. தொலைவிற்கு அதிகரிக்கும்.
- முன்மொழியப்பட்ட பல்தட போக்குவரத்துத் திட்டம் சுமார் 19.74 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சுமார் 784 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் தொடர்பான அம்சங்களைத் தொடர இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என்பது வேளாண் கடன் அட்டை மூலம் குறைவான வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் கிடைப்பது உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் கடன் அட்டைகள் மூலம் 7% மானிய வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன்களைப் பெற்றுள்ளதுடன், தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5% வட்டி மானியமும் வழங்கப்பட்டது.
- கூடுதலாக, கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள், வேளாண் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4% - மாகக் குறைக்கும் வகையில், உரியமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை என 3% வரை ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
- கால்நடை வளர்ப்பு அல்லது மீன்பிடித் தொழிலுக்காக பிரத்தியேகமாக பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டி பலனாக ரூ.2 லட்சம் வரை பொருந்தும்.