
27th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
5ம் தலைமுறை போர் விமானம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
- நம் நாட்டிடம் அதிக சக்திவாய்ந்த போர் விமானம் என்றால் அது ரஃபேல் போர் விமானம் தான். இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நம் நாடு வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரஃபேல் போர் விமானம் என்பது 4.5 ம் தலைமுறையை சேர்ந்தது.
- இந்த ரஃபேல் போர் விமானம் என்பது போரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தற்போது நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக விமானப்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக்கும் உள்ளது.
- இதனால் 5ம் தலைமுறை விமானம் என்பது முக்கியம். தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன.
- துருக்கி 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் நம் நாடும் 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்தது.
- அதன்படி 5ம் தலைமுறை விமானத்தை ஏஎம்சிஏ திட்டம் (ACMA Programme) மூலம் தயாரிக்க நம் நாடு முடிவு செய்தது. இந்த ACMA என்பதன் விரிவாக்கம் என்பது Advanced Medium Combat Aircraft என்பதாகும்.
- தமிழில் கூற வேண்டும் என்றால் மேம்படுத்தப்பட்ட மீடியம் ரக போர் விமானம் என்பதாகும். இந்நிலையில் தான் 5ம் தலைமுறை விமானத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- அதேபோல் விமானத்துக்கான மாடலுக்கு இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி இந்த விமானத்தை நம் பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ நிறுவனம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க உள்ளது.
- இந்த திட்டத்தின்படி நம் நாட்டுக்கு 5ம் தலைமுறை விமானம் என்பது 2035ம் ஆண்டில் கிடைக்கும். இந்த 5ம் தலைமுறை போர் விமானம் என்பது ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானமாகும்.
- சிங்கிள் சீட், 2 இன்ஜின்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ஸ்டெல்த் ரகம் என்பதால் இந்த விமானம் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. இதனால் இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
- புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation - GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், உடன் இருந்தனர்.
- இந்த உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கௌரவிக்கிறது.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரியமின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது.
- இந்த விருதை பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவித்துள்ளது.