Type Here to Get Search Results !

26th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

9000 குதிரைத் திறன் மின்சார ரயில் என்ஜினை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • பிரதமர் மோடி குஜராத்துக்கு இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக வந்துள்ளார். இன்று(மே 26) காலை வதோராவில் சாலைப் பேரணியை நடத்தினார். அப்போது பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் தாஹேத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் மின்சார ரயில் என்ஜின் ஆலையை பிரதமர் மோடி தொடக்கி வைத்து, இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட மின்சார ரயில் என்ஜினை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
  • இந்த ஆலையில் 9000 குதிரைத்திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்கள் உள்நாட்டு தேவைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்துக்கு இந்த என்ஜின்கள் முக்கிய பங்காற்றும்.
  • இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
  • பின்னர், தாஹோத்தில் சுமார் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
  • தொடர்ந்து, வேராவல் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் - தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.
நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்" குறித்த அறிக்கையை வெளியிட்டது நித்தி ஆயோக்
  • "நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டது, இது நடுத்தர நிறுவனங்களை இந்தியாவின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி இயந்திரங்களாக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை வழங்குகிறது. 
  • நடுத்தர நிறுவனங்கள் வகிக்கும் முக்கியமான, ஆனால் குறைவான செயல்திறன் கொண்ட பங்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிறுவனங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும் இலக்குகளை எடுத்துக் காட்டுகிறது.
  • நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் ஸ்ரீ சுமன் பெரி, நித்தி ஆயோக்கின் உறுப்பினர்கள் டாக்டர் வி.கே. சரஸ்வத், டாக்டர் அரவிந்த் விர்மானி ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 29% பங்களிப்பும், ஏற்றுமதியில் 40% பங்களிப்பும் 60% க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணியமர்த்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் உள்ள கட்டமைப்பை அறிக்கை ஆராய்கிறது.
  • பதிவுசெய்யப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 97% நுண் நிறுவனங்கள், 2.7% சிறிய நிறுவனங்கள், 0.3% மட்டுமே நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், துறையின் அமைப்பு விகிதாச்சாரமற்ற முறையில் எடைபோடப்படுகிறது:
  • இந்த 0.3% நடுத்தர நிறுவனங்கள் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 40% பங்களிக்கின்றன, வளர்ச்சியடைந்த பாரதம் 2047 இன் கீழ் இந்தியாவின் சுயசார்பு மற்றும் உலகளாவிய தொழில்துறை போட்டித்தன்மையை நோக்கிய மாற்றத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களை உத்திசார் பங்குதாரர்களாக அறிக்கை அடையாளம் காட்டுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel