
1st MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்த மத்திய அரசு
- ஊரக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை வழங்குவதை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தனிப்பட்ட வேலை உறுதி அட்டை வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் நிலையான வருமான வாய்ப்புகள் உருவாகும்.
- இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தாமதமாக்கியது. தற்போது, அந்த நிலுவைத் தொகையிலிருந்து ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- வேவ்ஸ் 2025 என்பது "படைப்பாளர்களை இணைத்தல், நாடுகளை இணைத்தல்" என்ற முழக்கத்துடன் நடைபெறும் நான்கு நாள் உச்சிமாநாடு ஆகும். இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த தயாராக உள்ளது.
- 2025-26 ஆம் நிதியாண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட(ரூ. 2.1 லட்சம் கோடி) 12.6% அதிகமாகும்.
- கடந்த மார்ச் மாதம் வருவாய் ரூ. 1.96 லட்சம் கோடி. கடந்த 2017, ஜூலை 1 ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும்.
- இதில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து பெறப்படும் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ. 46,913 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.