
15th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பண்ருட்டி அருகே 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு
- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
- உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்போது கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ, நீளம் 2 செ.மீ இவை விலங்கின் தோலை அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பிளேடு வகை, இதன் காலம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை.
- கடலூர் மாவட்டம் ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது போலவே இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தற்போது கண்டுபிடித்த நுண் கற்காலக் கருவி ஆதாரமாக உள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கடல் நீரை உப்பு நீக்கி குடிநீராக்குவதற்கான உள்நாட்டு நானோபோரஸ் பல அடுக்கு உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
- கான்பூரை தளமாகக் கொண்ட டிஆர்டிஓ ஆய்வகமான பாதுகாப்புப் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடலோர காவல்படை கப்பல்களில் உப்பு நீக்கும் ஆலைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த மேம்பாடு எட்டு மாதங்கள் என்னும் சாதனை நேரத்தில் நிறைவடைந்துள்ளது.
- கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பலின் தற்போதைய உப்பு நீக்கும் ஆலையில் ஆரம்ப தொழில்நுட்ப சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- பாலிமெரிக் சவ்வுகளின் ஆரம்ப பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் முழுமையாக திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டது. 500 மணிநேர செயல்பாட்டு சோதனைக்குப் பிறகு இறுதி செயல்பாட்டு அனுமதி வழங்கப்படும்.
- தற்போது, இந்த அலகு பரிசோதனையில் உள்ளது. சில மாற்றங்களுக்குப் பிறகு கடலோரப் பகுதிகளில் கடல் நீரை உப்புநீக்கம் செய்வதற்கு இந்த சவ்வு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது தற்சார்பு இந்தியா பயணத்தில் மற்றொரு படியாகும்.