
14th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாட்டிலேயே முதல்முறை இணையத்தில் லோக் அதாலத் சேவைகள் கேரளா அறிமுகம்
- இணையத்தில் (மக்கள் நீதிமன்றம்) லோக் அதாலத் சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இதன்மூலம் இணையத்தில் மனுத்தாக்கல் செய்யவும், இணைய வாயிலாகவே ஆஜராகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- அனைவரும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிமையாக நீதித் துறையை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் லோக் அதாலத் சேவைகளை கேரளம் அறிமுகம் செய்துள்ளது.
- கேரளத்தில் தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இணைய வாயிலான லோக் அதாலத் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஆனால், தற்போது இணைய வாயிலாகவும் லோக் அதாலத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு இந்தத் தடைகளை உடைத்தெரியும். இச்சேவை மே மாத முதல் வாரத்திலிருந்து முழு வீச்சில் அமலுக்கு வரும்.
- இந்த முறையில் அனைவரும் நீதித் துறையை அணுக, மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்துகளில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமும் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு ஆஜராகும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால் கப்பல் போக்குவரத்துத் துறையின் மீது விதிக்கப்பட்ட உலகின் முதல் உலகளாவிய கார்பன் வரிக்கு (Global carbon tax) ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. மேலும் 62 நாடுகளும் கார்பன் வரியை ஆதரித்து வாக்களித்துள்ளன.
- ஒரு வார தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) லண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைமையகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இது கப்பல்களில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் (Greenhouse gas emissions) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்பன் மாசு இல்லாத வகையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
- இந்த ஒப்பந்தத்தை இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட 63 நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எதிர்க்கின்றன. அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகயில் பங்கேற்கவே இல்லை. வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை.
- ஆந்திர மாநிலம் கா்னூலில் லேசா் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆா்டிஓ பரிசோதனை செய்தது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது. அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சாா்களையும் அழித்தது. இதன் மூலம், அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.
- மின்னல் வேகத்தில் செயல்பட்டு இலக்கை சில நொடிகளில் தாக்கியதன் மூலம், இது ட்ரோன்களுக்கு எதிரான மிகவும் ஆற்றல்வாய்ந்த ஆயுத அமைப்பாக உள்ளது.
- அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை 153-151 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
- ரிஷப் யாதவுக்கு இது முதல் உலகக் கோப்பை தங்கம் ஆகும். ஜோதி சுரேகா வெல்லும் 11-ஆவது உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
- ஆடவா் அணிகள் ரிகா்வ் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், தருண்தீப் ராய்ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1-5 என்ற புள்ளிக் கணக்கில் சீன அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினா்.