Type Here to Get Search Results !

29th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தாட்கோ புதிய தலைவர் நியமனம்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
  • தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதா ர மேம்பாட்டுத் திட்டங்களும்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு.நா.இளையராஜா அவர்களை நியமித்து அரசாணை(ப) எண்.110. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள்.28.03.2025இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரியில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு
  • மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7) சதவீதம் (கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11.6%), சுத்திகரிப்பு 0.8 சதவீதம் (2.6%), ஸ்டீல் 5.6 சதவீதம் (9.4%), மின்சாரம் 2.8 (7.6%) சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. 
  • கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உரம் 10.2 சதவீதம், சிமெண்ட் 10.5 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த 8 துறைகளும் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. 
  • முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.4 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் பிரம்மா
  • மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்பட்டது. 
  • மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
  • நிலநடுக்கத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு 'ஆபரேசன் பிரம்மா' என்கிற பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானத்தில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel