
21st FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுப்பு
- பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமான வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில், 24.9 செ.மீ நீளமும், 12.6 செ.மீ விட்டமும், 6.68 கிராம் எடை கொண்ட சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- 27.7மி.மீ உயரமும், 25.5 மி.மீ விட்டமும் கொண்ட இந்த ஆட்டக்காயின் வடிவம் ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் கொண்டதாக இருக்கிறது.
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார்.
- இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.
- பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாள் தலைமைத்துவ மாநாட்டில், அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீகம், பொதுக்கொள்கை, வர்த்தகம், சமூக நலன் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தலைமைத்துவப் பண்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் செய்வார்கள்.
- இந்த மாநாடு ஒத்துழைப்பு, சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களுடன் தலைமைத்துவப் பண்பிற்கான சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அம்சங்களை இளம் பார்வையாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.