4th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி தயாரிக்கப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பழனி 2024 சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன்படி, 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இந்த மாநாடு முத்தாய்ப்பாக அமைந்ததோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவுவகையும் கொள்ளச் செய்யும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
- புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
- வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும்.
- கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், கிராமப்புற பாரத் மஹோத்சவ் 2025 ஜனவரி 4 முதல் 9 வரை ' வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ க்கான ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்' மற்றும் குறிக்கோளுடன் நடைபெறும்.
- மஹோத்சவம் கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர்.
- இதை தொடர்ந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர மாநில விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
- 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் – ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இந்த பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் விதைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர்.
- ராக்கெட்டை அனுப்பிய 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.