29th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
- தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மீளவிட்டானில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் ரூ. 32.50 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
- கள ஆய்வு மேற்கொள்ள 3 நாள்கள் பயணமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக மீளவிட்டானில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார்.
- பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர்.
- இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது.
- டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
- லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட '14 கார்ப்ஸ்' ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த டிச. 26-ம் தேதி இந்த சிலையை திறந்து வைத்தார்.