21st DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி பிபி சவுத்ரி நியமனம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். அந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
- இதையடுத்து 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நியமித்தார். அந்த கூட்டுக்குழுவுக்கு தலைவராக பாஜ எம்பியும், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சருமான பிபி சவுத்ரியை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இந்த குழுவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி மற்றும் பிரியங்கா காந்தி , பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மக்களவையில் இருந்து 27 எம்பிக்களும், மாநிலங்களவையில் இருந்து 12 எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.
- கூட்டுக்குழுவில் உள்ள 39 உறுப்பினர்களில், 16 பேர் பாஜவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுகவில் இருந்து தலா 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் 22 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணியில் 15 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த குழு தனது அறிக்கையை அடுத்த கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளுக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
- அதில், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 50%க்கும் அதிகமான சாம்பலைக் கொண்ட ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்க்ரீட் (ஏசிசி) பிளாக்குகள், 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- வணிக நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டியை 12% இல் இருந்து 18% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியின் வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.