Type Here to Get Search Results !

11th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்
  • மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் வெளியிட்டார். 
  • இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் வெளிப்படுத்தின. இந்த தொகுப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
  • இதில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கக்காட்சி உள்ளிட்டவை உள்ளன.
கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணியகத்தின்கீழ் செயல்படும் ‘கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மையம்’ மற்றும் ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • ஒட்டுமொத்த இந்தியாவையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்துடன் பேரிடர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராகுதலுக்கான முதல்கட்ட நகர்வாக இது அமைந்துள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, பேரிடர் மேலாண்மையில் தொழில்நுட்பம் சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகுதல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுடன் இசைந்து பேரிடர் மேலாண்மையில் சர்வதேச பங்களிப்பு ஆகியவை அடங்கும்.
  • அந்த விதத்தில், பேரிடர் சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெற்ற இந்தியாவை கட்டமைப்பதில் இவ்விறு நிறுவனங்களும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel