Type Here to Get Search Results !

2nd OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தூய்மை இந்தியா தினம் 2024ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
  • தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று (அக்டோபர் 2) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 
  • அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி
  • நாடு முழுவதும் சமீபத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காகவும், தேசிய பேரிடர் மீட்பு நிதி முன்பணமாகவும் ரூ.5,858.60 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக ரூ.1,492 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.1,036 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூ.716 கோடியும், பீகாருக்கு ரூ.655.60 கோடியும், குஜராத்திற்கு ரூ.600 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.416.80 கோடியும், இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.189.20 கோடியும், கேரளாவுக்கு ரூ.145.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.50 கோடியும், திரிபுராவுக்கு ரூ.25 கோடியும், சிக்கிமுக்கு ரூ.23.60 கோடியும், மிசோராமுக்கு ரூ.21.60 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் மட்டும் 21 மாநிலங்களுக்கு ரூ.14,958 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்டிஆர்எப் மூலம் 21 மாநிலங்களுக்கு ரூ.9,044.80 கோடியும், என்டிஆர்எப் மூலம் 15 மாநிலங்களுக்கு ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (எஸ்டிஎம்எப்) 11 மாநிலங்களுக்கு ரூ.1,385.45 கோடியும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். 
  • பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்த திரு மோடி, ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். 25 ஏகலைவா பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • பிரதமரின் ஜன்மான் எனப்படும்  பழங்குடியினர் நியாய பேரியக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
  • பிரதம மந்திரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் கீழ் ரூ .1360 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel