
17th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஹரியாணா முதல்வராக நயாப் சைனி பதவியேற்பு
- ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
- முன்னதாக நேற்று ஹரியாணாவில் முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி (54) பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
- அதனைத்தொடர்ந்து அவர் ஆளுநர் பண்டரு தத்தாத்ரேயாவை சந்தித்து மாநிலத்தில் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
- அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேரிய வங்கதேசத்தவரை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்கள் குறிப்பாக மாணவர் சங்கம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
- இதில் பல்வேறு மாணவர் அனைப்புகள் பங்கேற்றது. இதில் அரசுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே அசாம் உடன்படிக்கையானது கையெழுத்தானது.
- அந்த உடன்படிக்கையின் படி 1966 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் குடியேறியவர்கள் இந்திய குடியுறிமை கோர குடியுறிமைசட்டம் வகை செய்கிறது.
- 1966 ஜனவரி 1-ம் தொடங்கி 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
- இந்த காலகட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் குடியேறியவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவர் என்று அறிவிக்கவும் வகைசெய்தது. இது இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கு முதல் நாள் என்பது குறிப்பிடதக்கது.
- இதனிடையே அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவை எதிர்த்து சிலர் பூர்வகுடிகள் சார்பில் உச்சர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மனு அரசியல் சாசன சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும் என்றும், குடியுறிமை சட்ட திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.