
11th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
- லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.
- இந்தோ-பசிஃபிக் பிராந்திய கட்டமைப்பு, இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டம், குவாட் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஆசியானின் முக்கிய பங்கினைப் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.
- 2024 ஆம் ஆண்டின், இரண்டாவது ராணுவத் தளபதிகள் மாநாடு, மெய்நிகர் முறையில் 2024, அக்டோபர் 10 அன்று காங்டாக்கில் நடைபெற்றது.
- இந்த நிகழ்வின் போது, இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமை தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளின் அனைத்து அம்சங்கள், எல்லைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறைக்கான சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- கூடுதலாக நிறுவன மறுசீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளிலும் மாநாடு கவனம் செலுத்தியது.
- மாநாட்டின் இரண்டாவது நாளின் முக்கிய அம்சமாக இந்திய ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை அமைந்திருந்தது.
- கேங்டாக்கில் மோசமான வானிலை நிலவியதால், சுக்னாவில் உள்ள ராணுவ முகாமிலிருந்து பாதுகாப்பு அமைச்சரின் உரை மெய்நிகர் முறையில் நிகழ்த்தப்பட்டது.