Type Here to Get Search Results !

3rd JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கீழடி அகழாய்வில் மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுப்பு
  • கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. 
  • இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
  • இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செ.மீ., 4.3 செ.மீ. 
கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு 15-வது நிதிக் குழு ரூ.5,337 கோடி ஒதுக்கீடு (2020–21 முதல் 2026–27 வரை)
  • நிதி ஒதுக்குவதில் கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு 15-வது நிதிக் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
  • 2015-16 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில், 14-வது  நிதிக்குழு கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு ரூ.3,774.20 கோடியை வழங்கியது. அதே சமயம் 15-வது நிதிக்குழுவின் மானியமாக இந்தப் பஞ்சாயத்துகளுக்கு 2020-21 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.5,337 கோடி (28.06.2024 நிலவரப்படி) வழங்கப்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுகள், மாநில நிதிக்குழுவை அமைப்பது கட்டாயமாகும். 2024-ம் ஆண்டு ஜூன் 11, ஜூன் 24 ஆகிய தேதிகளில் மாநில நிதிக்குழுக்களின் விவரங்களைக் கேட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. 
  • ஆனால் கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை 28-ம் தேதி வரை இது குறித்த எந்தப் பதிலையும் மாநிலத்திடமிருந்து பெறப்படவில்லை என அமைச்சகம் கூறியுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை கடந்தது
  • சென்செக்ஸ், இதுவரை இல்லாத வகையில் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் உச்சத்தில் இருக்கிறது.காலை 9: 15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 0.72 % உயர்வை சந்தித்து 80,013.77 ஆகவும் நிப்டி 0.7 % உயர்ந்து 24,291. 75 ஆகவும் வர்த்தமானது.
  • எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் உயர்வு காரணமாக நிப்டியும் உயர்வை சந்தித்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தன.
இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நோமாடிக் எலிபெண்ட் மேகாலயாவில் தொடங்கியது
  • இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி 2024 ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் பிற ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். 
  • மங்கோலிய ராணுவத்தின் சார்பில் அந்நாட்டின் 150 விரைவு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நோமாடிக் எலிபெண்ட் பயிற்சி என்பது இந்தியாவிலும், மங்கோலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடந்த முறை இந்தப் பயிற்சி ஜூலை 2023-ல் மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டு இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் திரு தம்பஜவின் கன்போல்ட் மற்றும் இந்திய ராணுவத்தின் 51 துணைப் பகுதி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், தேடுதல் நடவடிக்கைகள் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை இந்த ஆண்டு பயிற்சியில் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகிறது.
உலகின் மிக சக்திவாய்ந்த புதிய வெடிகுண்டை இந்தியா உருவாக்கியது 
  • மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த 'எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்' பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது. 
  • இதுஉலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உட்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும். பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கியில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும்.
  • டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 %அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2-வின் பாதிப்பு 28% அதிகமாக உள்ளது. 
தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரன் நியமனம்
  • மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990 தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel