Type Here to Get Search Results !

4th & 5th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th & 5th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது
  • 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதோடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது. 
  • இதில், 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் கடந்த 2000 முதல் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியிலிருக்கிறது. 
  • வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய முதலே முன்னிலையிலிருந்த பாஜக கூட்டனி தற்போது, மொத்தமுள்ள 147 இடங்களில் 80 இடங்களில் முன்னிலை வகிக்க 48 இடங்களுடன் ஆளும் பிஜு ஜனதா தளம் பின்தங்கியிருக்கிறது. 
  • இதன்மூலம், பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இவை தவிர காங்கிரஸ் 15 இடங்களுடன் முன்னிலையில் இருக்கிறது.
ஆந்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்குதேசம் வெற்றி
  • ஆந்திர பிரதேசத்தில் பகல் 2 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 
  • அதேபோல, மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
  • ஆந்திர பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எதிர்க்கட்சியான சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
  • சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்குதேசம் 120க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஜனசேனை 15க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 5க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்
  • நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது.
  • இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.
  • பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. இதில், தேசியவாத காங்கிரஸ்(சரத்) வேட்பாளர் போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முன்னிலை பெற்றுள்ளார்.
  • பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
  • ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
  • இந்த முறை பாஜக 36.56 சதவிகிதமும், காங்கிரஸ் 21.19 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன.
  • தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - 240, தெலுங்கு தேசம் - 16, ஐக்கிய ஜனதா தளம் - 12, சிவசேனை(ஷிண்டே) - 7, லோக் ஜனசக்தி ராம்விலாஸ் - 5, மதசார்பற்ற ஜனதா தளம் - 2, ஜனசேனா - 2, ராஷ்டிரிய லோக் தளம் - 2, தேசியவாத காங்கிரஸ் - 1, அப்னா தால் (சோனிலால்) - 1, பிற - 4 என மொத்தம் 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - 99, சமாஜவாதி - 37, திரிணமூல் - 29, திமுக - 22, சிவசேனை(உத்தவ்) - 9, தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 8, மார்க்சிய கம்யூ. - 4, ராஷ்டிரிய ஜனதா தளம் - 4, ஆம் ஆத்மி - 3, ஜேஎம்எம் - 3, முஸ்லிம் லீக் - 3, இந்திய கம்யூ. - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 2, கேரள காங்கிரஸ் - 1, மதிமுக - 1, பிற - 5 என மொத்தம் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4, ஏஐஎம்ஐஎம் - 1, சிரோமணி அகாலி தளம் - 1, ஜோரம் மக்கள் இயக்கம் - 1, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1, சுயேச்சைகள் - 7, பிற - 2 என மொத்தம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரைச் சந்தித்து ராஜினாமா
  • பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து அமைச்சரவையுடன் சேர்த்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
  • அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை திரு நரேந்திர மோடியையும் அவரது அமைச்சர்களையும் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி "தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். 
  • தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை திரு மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel