![](https://2.bp.blogspot.com/-eKecWZnOX_k/WZvaIgXHkDI/AAAAAAAAEKk/YW1X-qYR2dEBE-IMTdcU1QtHQiRjFaCWwCPcBGAYYCw/s640/ca%2Bcov.jpg)
3rd JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் சாதனைகள்
- மக்களவை தேர்தலில் இந்த முறை 64.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். இந்தத் தேர்தலில் 31 கோடி பெண்களும் 33 கோடி ஆண்களும் வாக்களித்துள்ளனர்.
- உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, 77வது உலக சுகாதாரப் பேரவை கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு உறுப்பு நாடுகளால் செய்யப்பட்ட 300 முன்மொழிவுகளின் அடிப்படையில் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (ஐ.எச்.ஆர் 2005) திருத்தங்கள் செய்ய ஒப்புக்கொண்டது.
- சர்வதேச சுகாதார விதிமுறைகளில் இலக்கு வைக்கப்பட்ட திருத்தங்கள், சர்வதேச பொது சுகாதார அவசரநிலைகள் மற்றும் தொற்றுநோய் அவசரநிலைகளுக்கு ) தயாராகவும் பதிலளிக்கவும் நாடுகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- ஐஎச்ஆர் (2005) இன் கீழ் தேவையான முக்கிய திறன்களை உருவாக்குதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் வளரும் நாடுகளை ஆதரிப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் போருசியா டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.
- இதன் மூலம், போட்டியிலேயே அதிக முறை சாம்பியனான அணியாக நீடிக்கும் ரியல் மாட்ரிட், அந்த எண்ணிக்கையை தற்போது 15-ஆக அதிகரித்துக்கொண்டுள்ளது. அடுத்த அதிகபட்சமாக, ஏசி மிலன் 7 முறை சாம்பியனாகி 2-ஆவது இடத்தில் உள்ளது.
- லண்டன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக டேனி காா்வஜல் (74'), வினிகஸ் ஜூனியா் (83') ஆகியோா் கோலடித்து அசத்தினா். சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு ரூ.179 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
- இத்துடன், சாம்பியன்ஸ் லீக் போட்டியில், பயிற்சியாளா் காா்லோ அன்செலோட்டி வழிகாட்டும் அணி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.
- போட்டி வரலாற்றில் வேறெந்த பயிற்சியாளரும் இத்தனை முறை தனது அணியை வெற்றிக் கோப்பைக்கு வழிநடத்தியதில்லை.
- தேசிய மின்னணு-புத்தகாலயா என்ற டிஜிட்டல் நூலக தளத்திற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளையுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
- உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர், திரு சஞ்சய் குமார், இணைச் செயலாளர் திருமதி அர்ச்சனா சர்மா அவஸ்தி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- இந்தப் புத்தகாலயா, அதன் முதல் வகையான டிஜிட்டல் நூலகம், ஆங்கிலம் தவிர 22 க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட கல்வி சாரா புத்தகங்களை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே வழங்குவதன் மூலம் இந்திய குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாழ்நாள் முழுவதும் வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்ட முயற்சிக்கும்.
- உலகின் மிகப்பெரிய தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (03.06.2024) புதுதில்லியில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், உணவுப்பதன தொழில்கள் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய உணவுக்கழகம் மற்றும் நபார்டு வங்கியின் அதிகாரிகளுடன் முதலாவது கூட்டத்தை நடத்தினர்.
- இந்தத் திட்டம் மாநில அரசுகள், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு, தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் ஆகியவற்றின் உதவியுடன் கூடுதலாக 500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.