Type Here to Get Search Results !

11th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் 
  • மூளைச்சாவு அடைந்தவர்கள் கடந்த ஆண்டு 178 பேர் 1000 உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 1000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் பயன்பெற்றுள்ளனர். 
  • இந்தியாவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்டதற்கு தமிழகத்திற்கு சிறந்த மாநிலமாக பட்டம் வழங்கினர். கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 
  • கடந்த 2023ம் ஆண்டு முதல் இதுவரை, 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவு
  • தேர்தல் ஆணையத்தின் 07.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக் குறிப்பு மற்றும் 08.05.2024 தேதியிட்ட செய்திக் குறிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நடப்பு 2024 பொதுத் தேர்தலில் 93 தொகுதிகளில் நடந்த  மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • மூன்றாம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.89  சதவீதத்தினரும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதத்தினரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 25.2 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
  • 3 ஆம் கட்டத்திற்கான மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும்  வாக்குப்பதிவு விவரங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன.  பீகாரில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், மத்திய பிரதேசத்தில் நான்கு வாக்குச்சாவடிகளிலும் மூன்றாம் கட்டத் தேர்தலின்  மறுவாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவில் பாலஸ்தீன தீர்மானம் வெற்றி
  • இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. 
  • இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் நேற்று (10-05-24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
  • இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. 
  • அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது. 
  • கடந்த மாதம், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel