Type Here to Get Search Results !

14th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்ட்டபிள் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஆயுத சிஸ்டத்தை வெற்றிகரமாக சோதனை
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வெளியில் எடுத்துச் செல்லத்தக்க டேங்க் எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை  ஆயுத சிஸ்டம்  தொழில்நுட்பத்தை உயர் மேன்மையுடன் நிரூபிக்கும் நோக்கத்துடன் பல்வேறு முறைகளில்  பல முறை கள மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு  லாஞ்சர், இலக்கைக் கண்டறியும் திறன் அமைப்பு,  ஃபயர் கட்டுப்பாட்டு அலகு  ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்திய ராணுவத்தின் முழுமையான செயல்பாட்டு திறனுக்கு ஏற்ப  போதுமான எண்ணிக்கையிலான ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. 
  • ஏப்ரல் 13, 2024 அன்று ராஜஸ்தானின் பொக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் இந்த ஏவுகணை  சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. ஏவுகணை செயல்திறன் மற்றும் போர்க்கருவிகளின் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக இருப்பது கண்டறியப்பட்டது.
  • இது நவீன  பிரதான போர் டாங்கியை தோற்கடிக்கும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சிஸ்டம் பகல்/இரவு மற்றும் மேல் தாக்குதல் திறனுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. டாங்கி போருக்கான ஏவுகணை திறனுக்கு இது ஒரு சிறந்த மதிப்பு கூடுதலாகும். 
  • இதன் மூலம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வெற்றிகரமான செயல்விளக்கம் முடிவடைந்து, இந்த அமைப்பு இப்போது இறுதி பயனர் மதிப்பீட்டு சோதனைகளுக்கு தயாராக உள்ளது, இது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
  • ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. 
  • இந்த தாக்குதலின்போது அமெரிக்கா சில ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.
  • கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் அதிகாரி உட்பட ஏழு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் குற்றம் சாட்டியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel