Type Here to Get Search Results !

9th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) முக்கிய காரணமாகும். தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் எச்.பி.வி. தடுப்பூசியை நடைமுறைப்படுத்திய நாடுகளின் அனுபவம். 
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முந்தைய நிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை காட்டியுள்ளது. 
  • மனித பாப்பிலோமா வைரசுக்கு தடுப்பூசி போடுவது, உலக சுகாதார நிறுவனத்தின் 2030-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்கும் கொள்கையின் அடித்தளமாக அமையும். எச்.பி.வி. தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. 
  • விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் எச்.பி.வி தடுப்பூசி திட்டம் இலவசமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
  • அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
  • அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
  • செலா சுரங்கப்பாதையானது, ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. மழை, குளிர், வெயில் உள்ளிட்ட வானிலைகளை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • மிக உயர்தர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. செலா சுரங்கப்பாதையானது, 13 ஆயிரம் அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல இராணுவத்தினருக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சுரங்கப்பாதை திட்டமானது, வேகமான போக்குவரத்துக்கு உதவுவது மட்டுமன்றி, சீனாவுக்கு அருகில் உள்ளதால், இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என கூறப்படுகிறது.
  • சுமார் 13, 000 அடி உயரத்தில் உள்ள சுரங்கப்பாதையானது, உலகத்தில் உள்ள நீளமான இரட்டைப் பாதையுடைய சுரங்கப்பாதை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.17,500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
  • வடகிழக்கு பகுதிகள் மேம்பாட்டுக்கான பிரதமரின் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் அஸ்ஸாமில் பல்வேறு வளர்ச்சித் திடங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அஸ்ஸாமில் ரூ. 1,300 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் இன்று (மார்ச் 9) தொடக்கி வைத்தார்.  
  • முகலாயர்களை எதிர்த்து போரில் வெற்றிகண்ட அஹோம் ரஜ்ஜியத்தின் படைத் தளபதியான லச்சித் போர்பூகனின் நினைவாக ஜோர்ஹாட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது 125 அடி உயர சிலையையும் பிரதமர் மோடி இன்று (மார்ச் 9) திறந்து வைத்தார்.
  • அஸ்ஸாமின் மேம்பாட்டுக்காக இரட்டை இன்ஜின் அரசு அதிவேகத்தில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அஸ்ஸாமில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5.5 லட்சம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கடற்படைத் தளபதிகள் முதலாவது மாநாடு 2024
  • ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் இந்த ஆண்டின் முதலாவது மாநாடு 2024 மார்ச் 05 முதல் 08-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முக்கியமான கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • மாநாட்டின் தொடக்க அமர்வு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் நடைபெற்றது. தொடர் நிகழ்ச்சிகள் புதுதில்லியில், நேரடியாகவும் காணொலிக் காட்சி மூலமாகவும், மார்ச் 07 மற்றும் 08-ம் தேதிகளில் நடைபெற்றன. 
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற தொடக்க அமர்வில், முப்படைகளின் தளபதி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் மற்றும் இதர மூத்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • புதுதில்லியில் 07-08 மார்ச் 2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முக்கிய செயல்பாடுகள், தளவாடங்கள், பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கடல்சார் களத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
  • மாநாட்டின் நிறைவு நாளான நேற்று (2024 மார்ச் 08) மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற 'சாகர்மந்தன்' நிகழ்வின் போது கடற்படைத் தளபதிகள் பல்வேறு வல்லுநர் குழுவினருடன் கலந்துரையாடினர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து தற்சார்பு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை மேம்படுத்துவதற்கும் உள்ள வழிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை புதுதில்லி எய்ம்ஸ் வளாகத்தில் செயல்படுத்த இரு நிறுவனங்களுக்கும் இடையே புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். 
  • உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) ஊழியர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்க மத்திய ஆயுதக் காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனம் என்ற நிறுவனத்தை (சிஏபிஐஎம்எஸ்) அமைக்க உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) தொலைநோக்குத் திட்டம் வகுத்துள்ளது.
  • மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (சிஏபிஎஃப்ஐஎம்எஸ்) புதுதில்லி எய்ம்ஸ் வளாகத்தில் நடத்த சிஏபிஎஃப்ஐஎம்எஸ் மற்றும் புதுதில்லி எய்ம்ஸ் இடையே (எம்ஓஏ) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான நிதி, வளாகத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான தொடர் செலவுகளை உள்துறை அமைச்சகம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கும். 
  • புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை அமைக்க ரூ.2,207.50 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒத்துழைப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, மருத்துவ பட்டதாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய ஆயுத காவல் படையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். 
  • மேலும், எய்ம்ஸ் – சிஏபிஎஃப்ஐஎம்எஸ் வளாகத்தை செயல்படுத்துவதற்காக 4354 பணியிடங்கள் உருவாக்கப்படுவதால் இது வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய வாய்ப்பையும் உருவாக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இந்திய மின்னணுவியல் துறை திறன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, இந்திய மின்னணு துறை திறன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • திரு ராஜேஷ் அகர்வால் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னணுத் துறையில் பல்வேறு வேலைகளுக்கு தேவையான திறன்களுடன் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் 08.03.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது
  • இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி மூலம் மனித வளத்தை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. 
  • இஎஸ்எஸ்சிஐ -ன் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்த முயற்சி நிலையான வாழ்வாதாரங்களுக்கான பாதைகளை உருவாக்குவதையும், உலகளவில் போட்டி நிறைந்த பணியாளர்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.வி.இ.டி) பாடத் திட்ட தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி வழங்க இஎஸ்எஸ்சிஐ உறுதியளிக்கிறது. 
  • கூடுதலாக, பயிற்சியாளர்களுக்கு தடையற்ற வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக சாத்தியமான உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளுடன் ஈடுபாட்டை எளிதாக்கும். 
  • முக்கியமாக, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் தொழில்துறை வரையறைகளுக்கு இணங்க மாத சம்பளத்திற்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும்.
  • மேலும், வேலைவாய்ப்புக்குப் பிந்தைய ஆதரவுக்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும். பணியமர்த்தலைத் தொடர்ந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஆலோசனை மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம், பணியாளர்களுக்குள் பிடபிள்யூடி-களின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
  • இந்த ஒத்துழைப்பு உள்ளடக்கம் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 
  • மின்னணுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் செழித்து வளர உதவும் சூழலை உருவாக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மற்றும் இஎஸ்எஸ்சி ஆகியவற்றின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சைனபிள் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சைனபிள் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
  • பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மேற்கொள்ளும்.
  • பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் தொடர்பு மற்றும் அணுகலை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, பல்வேறு துறை நிறுவனங்கள் வெவ்வேறு ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்துகின்றன. எனவே மையப்படுத்தப்பட்ட அளவில் பராமரிக்கப்படும், பயனருக்கு ஏற்ற குறுகிய குறியீடு ஹெல்ப்லைன் எண்ணை நிறுவுவது முக்கியம்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஹெல்ப்லைன், குறுகிய குறியீடான 14456, 2024 ஜனவரி 8 அன்று கோவாவில் நடந்த சர்வதேச ஊதா விழாவில் தொடங்கப்பட்டது.
  • பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாட்டுடன் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, சைனபிள் கம்யூனிகேஷன்ஸ் ஒத்துழைப்பு சமூக பொறுப்புடமை நிதி மூலம் ஐஎஸ்எல் உரைபெயர்ப்பாளர்களை வழங்கும். இந்த ஹெல்ப்லைன் வார நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel