Type Here to Get Search Results !

23rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
  • ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் பகுதி, தற்போது தமிழக அரசால் தொல்லியல் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த இடத்திலிருந்து 300 மீ., தொலைவில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பனைமரங்களுக்கு இடையில், 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. கேடயத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. 
பிரதமர் மோடிக்கு 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது 
  • பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.
  • பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 
  • இதனை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், வழங்கினார். இந்த விருதை பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இஸ்ரோவின் 'புஷ்பக்' விண்கலம் சோதனை வெற்றி
  • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. 
  • இதன் பலனாக 2016-ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.
  • இதன்பிறகு கடந்த 2023-ம் ஆண்டில் இஸ்ரோ தயாரித்த புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விண்கலம் பத்திரமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
  • இதைத் தொடர்ந்து இஸ்ரோ தயாரித்த 'புஷ்பக்' என்ற புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது. இந்த விண்கலம் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.
குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜெயந்த் மூர்த்தி பெயர்
  • அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக 2011-ம்ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜெயந்த் மூர்த்தி. 
  • இவரது ஆராய்ச்சிகள் புளூட்டோ உள்ளிட்ட குறுங்கோள்களை மையப்படுத்தி இருந்தது. குறிப்பாக, பிரபஞ்சபுறஊதா கதிர்களின் பின்னணியைஅளவிடுவதில் கவனம் செலுத்தினார்.
  • சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் நிகழக்கூடிய வானியற்பியல் மாற்றங்களை உற்று நோக்குவதாக இவரது ஆய்வுகள் அமைந்தது. நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தற்போது கவுரவ பேராசிரியராக வானியற்பியல் பாடம் கற்பித்து வருகிறார்.
  • விண்வெளியில் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிறது ஒரு குறுங்கோள். 
  • சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் இந்த குறுங்கோள் '2005 ஈஎக்ஸ்296' (2005 EX296) என்றே இதுவரை அழைக்கப்பட்டது. 
  • தற்போது இதற்கு, '(215884) ஜெயந்த்மூர்த்தி' என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியை கவுரப்படுத்தி இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel