காவலா் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் அரசால் இலவசமாக அளிக்கப்படும் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவா்கள் அடுத்தகட்டமாக உடல் திறன் தேர்வுக்குத் தயாராக வேண்டியுள்ளது.
இவா்களுக்கு உதவும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை (ஜனவரி31) காலை 10 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சிறந்த பயிற்றுநா்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.