தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு பிப்.28- ஆம் தேதிக்குள் இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போா் பயனடையும் வகையில், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் பிப்.12-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.