Type Here to Get Search Results !

7th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை ‘ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்பு சட்டத் திருத்த மசோதா - 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் ஜுகல் கிஷோா் சா்மா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் சிந்தா அனுராதா ஆகியோா், மசோதாவை வரவேற்றுப் பேசினா்.
  • ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி சட்டங்களில் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் தற்போதைய மசோதா வழிவகை செய்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் முந்தைய காலங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த மசோதா மூலம் நீதி உறுதி செய்யப்படும். விவாதத்துக்குப் பின்னா் மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • கடந்த 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.
கிலோ ரூ.29-க்கு ‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்
  • ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. 
  • 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும். இத்திட்டத்தை தில்லியில் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
  • 100 நடமாடும் விற்பனை நிலையங்கள்: இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேன்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில் 100 நடமாடும் விற்பனை நிலையங்களை பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
  • இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய 2 கூட்டுறவு சங்கங்கள் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்பட உள்ளது. இணைய-வணிக வலைதளங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும்.
ஆந்திரம், ஒடிஸா மாநில எஸ்.சி., எஸ்.டி. பட்டியலில் மாற்றம் செய்வதற்கான மசோதாக்கள் - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
  • ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) சமூகத்தினருக்கான பட்டியலில் மாற்றம் செய்ய வகை செய்யும் 2 மசோதாக்கள் அவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விதி எண்.17-இன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்கும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டுவந்தாா்.
  • அதனைத் தொடா்ந்து, ‘அரசியலமைப்பு சட்ட பழங்குடியின (எஸ்.டி.) உத்தரவு திருத்த மசோதா 2024’ மற்றும் ‘அரசியலமைப்பு சட்ட எஸ்.சி., எஸ்.டி. உத்தரவு திருத்த மசோதா 2024’ ஆகிய மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தாக்கல் செய்தாா். 
  • இந்த மசோதாக்கள் ஆந்திர மாநிலத்தில் எஸ்.டி. பட்டியலில் புதிதாக போண்டோ போா்ஜா, கோந்த் போா்ஜா, பரங்கிபெரிஜா சமூகத்தினரைச் சோ்க்கவும், ஓடிஸாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பட்டியலில் புதிதாக 4 சமூகத்தினரைச் சோ்க்கவும் வகை செய்கின்றன.
  • இந்த விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel