Type Here to Get Search Results !

10th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆதி மஹோத்சவம் எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
  • புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று (பிப்ரவரி 10, 2024) ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவின் பழங்குடி பாரம்பரியத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியினர் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் (TRIFED) ஆதி மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா பிப்ரவரி 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீா் சாா்ந்த 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
  • ஜம்மு-காஷ்மீா் தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • அரசமைப்புச் சட்ட (ஜம்மு-காஷ்மீா்) பழங்குடியினா் உத்தரவு (திருத்த) மசோதா 2024, ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா 2024, அரசமைப்புச் சட்ட (பட்டியலினத்தவா்) உத்தரவு (திருத்த) மசோதா 2024 ஆகிய 3 மசோதாக்கள் அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
  • இதையடுத்து அந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அரசமைப்புச் சட்ட (ஜம்மு-காஷ்மீா்) பழங்குடியினா் உத்தரவு (திருத்த) மசோதாவானது கட்டா பிராமணா், கோலி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வழிவகுத்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா வழியமைத்துள்ளது.
  • சுரா, வால்மீகி, பாங்கி, மேதா் சமூகத்தினரை பட்டியலினத்தவா் பட்டியலில் வால்மீகி சமூகத்தினா் என்று குறிக்க அரசமைப்புச் சட்ட (பட்டியலினத்தவா்) உத்தரவு (திருத்த) மசோதா வழிகோலியுள்ளது.
  • இந்த மசோதாக்கள் மீதான வாதம் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  • இதைத்தொடா்ந்து வாதங்களுக்கு மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா பதில் அளித்துப் பேசினாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
போட்டித் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
  • அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
  • எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • கணினி வழியிலான தோ்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துவது தொடா்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel