8th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
TNGIM2024 - உலக முதலீட்டாளர்கள் மாநாடு - இரண்டாம் நாள்
- சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.
- பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய நிறைவு நாள் விழாவில் பேசினார். அதில் இன்று இரண்டாம் நாள் டாப் 10 குழுமம் பற்றிய முக்கிய முதலீட்டு விவரங்களை பார்க்கலாம்.
- டாடா (TATA) குழுமம் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் 70,800 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதனால், 3,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- அதானி குழுமம் சார்பில் பல்வேறு துறைகளில் 24,500 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- மத்திய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (CPCL ) சார்பில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,400 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- அதானி கனெக்சன் நிறுவனத்தின் சார்பில் 13,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- L&T நிறுவனம், சென்னையில் புதிய ஐடி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க 3,500 கோடி ருபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- ராயல் என்பீல்ட் நிறுவனம் சார்பில் 3000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து காஞ்சிபுரத்தில் புதிய இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் புதிய டேட்டா சேமிப்பு தளத்தை அமைக்க 2,740 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 167 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
- ஹிந்துஜா குழுமம் தமிழக்த்தில் 2500 கோடி ரூபாய் அளவில் செங்கல்பட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் ஹைலி க்லோரி ஃபுட்வேர் எனும் நிறுவனம் 2302 கோடி ரூபாய் செலவில் புதிய காலணி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, இன்று அடிக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- ஸ்டெல்லண்டிஸ் குழுமம் திருவள்ளூரில் ஆலை அமைக்க 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
- இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.6,64,180 கோடி என்பதை இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
- இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14,54,712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12,35,945 நபர்களுக்கும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள், மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.
- 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.
- குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர்.
- இதுகுறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், '11 குற்றவாளிகளின் நடத்தை நன்றாக இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவித்ததாகவும்' தெரிவித்துள்ளது. குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
- இந்த நிலையில் பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 'பில்கீஸ் பானு வழக்கு விவகாரத்தில் குற்றம் நடந்தது ஒரு மாநிலமாக இருந்தாலும், வழக்கு நடத்தப்பட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். எனவே குற்றவாளிகளின் தண்டனை காலத்துக்கு முன்னரே அவர்களை விடுவிக்கும் போது வழக்கு நடைபெற்ற மாநிலத்தை சம்மந்தப்பட்ட அரசு ஆலோசனை கேட்க வேண்டும்.
- பில்கீஸ் பானு குற்றவாளிகள் விவகாரத்தில் நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம், பெண்களின் மரியாதை முக்கியம், பெண்கள் மரியாதைக்குரியவர்கள்.
- பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்யப்படுகிறது' என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
- மேலும் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வங்க தேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
- இந்த தேர்தலில் வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக பதவியேற்க உள்ளார்.
- இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி 20 இடங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
- ஷேக் ஹசினா ஆட்சியில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் ஷேக் ஹசீனாவின் வெற்றி வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.