Type Here to Get Search Results !

13th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

எனது கிராமம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
  • அதன்படி 3வது ஆண்டாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நடைபெற்றது.
  • இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர். துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து 1400-க்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • முதல் நாள் (ஜனவரி 11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்தார். 
  • அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அதனைத்தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.
  • இரண்டாம் நாள் (ஜனவரி 12) அயலகத் தமிழர் தினம் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது கிராமம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. 
  • இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு
  • திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.
  • இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும்.
  • தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்.காலேஷ் சதாசிவம், திரு.எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடிதுள்ளனர். இது "என்டோமான்"என்னும் அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும்.
ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட (3 x 800 மெகாவாட் - நிலை 1) பிட் ஹெட் கிரீன் ஃபீல்ட் அனல் மின் திட்டத்தை அமைப்பதற்கான ஐபிசி வழியிலான ஒப்பந்தத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. 
  • இந்தத் திட்டம் மிக உயர்ந்த வெப்பம் மற்றும் அழுத்தத்தில் செயல்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் உற்பத்தியாகும் 2400 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. 
  • பாய்லர்கள், டர்பைன், ஜெனரேட்டர்கள், ஆலைகளின் சமநிலை, எஃப்ஜிடி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற உபகரணங்களின் பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவை 3 X800 மெகாவாட் - 2400 மெகாவாட் நிலை -1-ல் அடங்கும்.
  • இந்த அனல் மின் திட்டத்திற்காக, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில் 2020 முதல் செயல்பட்டு வரும் என்.எல்.சி.ஐ.எல் இன் தலாபிரா 2 மற்றும் 3 சுரங்கங்களிலிருந்து ஆண்டுக்கு 20 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. 
  • இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஹிராகுட் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஐ.எஸ்.டி.எஸ் மற்றும் எஸ்.டி.யு நெட்வொர்க் மூலம் வெளியே அனுப்பப்படும்.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்ற எஃப்.ஜி.டி மற்றும் எஸ்.சி.ஆர் போன்ற சமீபத்திய மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் இந்த திட்டம் செயல்படும். 
  • எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பசுமை முன்முயற்சியின் ஒரு பகுதியாக பயோ மாஸ் கையாளுதல் அமைப்புகளுடன் இணைந்து கொதிகலன்கள் வடிவமைக்கப்படும்.
  • இத்திட்டத்தின் முதல் அலகு 2028-29 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. பிட் ஹெட் அனல் மின் திட்டம் என்பதால், மாறுபடும் செலவு குறைவாகவே இருக்கும். மேலும் என்.எல்.சி இந்தியா, அதன் பயனாளிகளுக்குக் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel