Type Here to Get Search Results !

12th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம் - பிரதமர் மோடி திறந்துவைத்தார்
  • மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. 
  • கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது. 
  • இப்பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான பயணத்தை வழங்கும். மேலும், இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களை ஒரு முக்கிய அங்கமாக மாற்றுவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த முயற்சியின் மற்றொரு பகுதியாக, நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை (என்ஒய்எஃப்) பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 முதல் 16 வரை ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவை நடத்தும் மாநிலம் மகாராஷ்டிரா. 
  • வளர்ச்சியடைந்த இந்தியா Bharat@ 2047: இளைஞர்களுக்காக இளைஞர்களால் என்பது இந்த ஆண்டு விழாவின் கருப்பொருள் ஆகும்.
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
  • ஒடிசா கடற்கரையில், நவீன தலைமுறையைச் சேர்ந்த ஆகாஷ் (ஆகாஷ் என்.ஜி) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது மிக குறைந்த உயரத்தில், அதிவேக ஆளில்லா வான்வெளி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
  • இந்த ஏவுகணை சோதனையை ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் டிஆர்டிஓ வெற்றிகரமாக செய்தது. இந்த ஏவுகணை செயல்பாடுகள் ஐடிஆர் சண்டிபூர் அமைத்த ரேடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் அமைப்புகள் சேகரித்த தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டது. 
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பருவநிலை மாநாடு 2024
  • "இந்தியாவுக்கான பசுமை மாற்றத்தைக் கண்டறிதல்" என்ற தலைப்பில் பருவநிலை மாநாடு 2024, 12 ஜனவரி 2024 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்றது. 
  • மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப திறன்களைத் திரட்டுவதில் தனியார் துறை, பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முக்கியப் பங்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 
  • அரசின் முயற்சிகளை மேம்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் புதுமையான பருவநிலை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel