Type Here to Get Search Results !

7th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தெலங்கானா முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி
  • தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக, பி.ஆர்.எஸ்ஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
  • டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேவந்த் ரெட்டியை முதல்வராக்க முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை.
  • அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது.
  • இதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
  • பின்னர், பதவியேற்பு விழா தொடங்கியதும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, தெலங்கானாவில் காங்கிரஸின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி. அவரைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார். 
  • இவர்களோடு, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி, வெங்கட் ரெட்டி, சீதக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மல நாகேஷ்வர் ராவ், கொண்டா சுரேகா, ஜூபாலி, கிருஷ்ணா பொங்குலேட்டி ஆகிய 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகராக, கதம் பிரசாத் குமாரை காங்கிரஸ் தேர்வுசெய்திருக்கிறது.
புயல் பாதிப்பு தமிழக அரசுக்கு ரூ.450 கோடி - மத்திய அரசு அறிவிப்பு
  • மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் 2வது தவணையில் உள்ள நிதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். முதல் தவணையை இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி-1 வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
  • ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 'அக்னி -1' இன்று ( டிசம்பர் 07, 2023) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை மிகவும் துல்லியமான ஏவுகணையாகும்.
  • இது மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த சோதனையின்போது அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel