19th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் 2023-ல் பாரா தடகள வீரர்களுக்கான ஆதரவை மேம்படுத்த கேலோ இந்தியா மற்றும் ஸ்வயம் இணைந்துள்ளன
- கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளின் போது புதுதில்லியில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை அணுகுவதை உறுதி செய்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மை திட்டமான கேலோ இந்தியாவும் இந்தியாவின் முன்னோடி அணுகல் அமைப்பான ஸ்வயம் அமைப்பும் கைகோர்த்துள்ளன.
- 1400-க்கும் அதிகமான பாரா-தடகள வீரர்களுக்கு அணுகக்கூடிய போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டன. இந்த 8 நாள் நிகழ்வின் தொடக்கத்தில் 300-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மற்றும் விளையாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 125 ஆண்டுகள் பழைமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், தபால் அலுவலக மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
- இந்த மசோதாவின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட மீறல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைக்க எந்தவொரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
- கடந்த டிச.4-ஆம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த மசோதா குறித்து மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது.
- நாடாளுமன்றப் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதற்கு இடையே, விவாதம் சுருக்கமாக நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
- உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்தியாவின் பொருளாதார உறுதியையும், வளர்ச்சியையும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.
- இந்தியா நட்சத்திர செயல்பாட்டாளராக வளர்ந்து வருகிறது என்றும், உலகளாவிய வளர்ச்சியில் இதன் பங்களிப்பு 16 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் இந்த நிதியம் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.
- விவேகமான பருண்மைப் பொருளாதார கொள்கைகளின் வழிகாட்டுதலோடு இந்த ஆண்டு உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.