30th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்கள் வாங்க 1.1 லட்சம் கோடி - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
- இந்திய ராணுவத்திற்கு 97 தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பலான ஒப்பந்தங்களுக்கு மத்திய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இவை இரண்டும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்களும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன. இது தவிர வேறு ஒப்பந்தங்களுக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டர் ஆகும். பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு விலையை இறுதி செய்யும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.
- வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி மணிப்பூரின் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியுடன் (யுஎன்எல்எப்) சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
- இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் ஆகும், இதில் மணிப்பூரின் பழமையான யுஎன்எல்எப் ஆயுதக் குழு வன்முறைப் பாதையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய ஒப்புக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றினார். புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.
- நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான அரசின் பிரச்சாரம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதாகக் கூறிய பிரதமர், இன்று நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
- புதுதில்லியில் 2023, நவம்பர் 30, அன்று 40 வது கடலோர காவல்படை தளபதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்தியக் கடலோரக் காவல் படையின் தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள், செயல்பாட்டு தலைமை தயார்நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து இயக்குநர் ராகேஷ் பால் பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கினார்.
- சமகால கடல்சார் சவால்களை எதிர்கொள்வது, நாட்டின் கடலோரக் கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்துவதை இந்த மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.