29th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய பொறியியல் துறை ஏற்றுமதி அக்டோபரில் ஏறுமுகம்
- 18 முக்கிய சந்தைகளுக்கான இந்திய பொறியியல் துறையின் ஏற்றுமதி, நடப்பாண்டு அக்டோபரில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவுக்கான பொறியியல் துறை ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 1361 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2.2 சதவிகிதம் உயர்ந்து, 1391.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
- ஜெர்மனிக்கான பொறியியல் ஏற்றுமதி, அக்டோபரில் 20 சதவிகிதம் உயர்ந்து 342.7 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பொறியியல் ஏற்றுமதி, 2.9 சதவிகிதம் உயர்ந்து 348.6 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
- இந்தியாவின் ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 7550.69 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 7.2 சதவிகிதம் உயர்ந்து, நடப்பாண்டு அக்டோபரில் 8094.20 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
- அதே வேளையில், ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 62.63 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டு அதே காலகட்டத்தில், 1.61 சதவிகிதம் குறைந்து 61.63 பில்லியன் டாலர்களாக சரிவை சந்தித்துள்ளது.
- வளர்ந்த நாடுகளில், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், உலோகத் துறையில் தேவை சரிந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
- அக்டோபரில், நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதியில், இந்திய பொறியியல் துறையின் பங்கு 24.11 சதவிகிதம் என்று இஇபிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 24,104 கோடி மதிப்பிலான (மத்திய அரசின் பங்கு: ரூ.15,336 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு: ரூ. 8,768 கோடி) குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10.45 கோடி பழங்குடியினர் உள்ளனர், இதில் 18 மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 75 சமூகங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 2026, ஏப்ரல் 1 முதல் ஐந்து (5) ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.
- அரசியலமைப்புச் சட்டத்தின் 280(1) பிரிவின்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகளின் நிகர வருவாயைப் பகிர்ந்தளிப்பது, அந்த வருவாயில் அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பங்கீடு செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய நிதிக் குழுவை அமைப்பதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
- பதினைந்தாவது நிதிக்குழு 2017, நவம்பர் 27 அன்று அமைக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2025-26 நிதியாண்டு வரை செல்லுபடியாகும்.
- பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 81.35 கோடி பயனாளிகளுக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிவு செய்துள்ளது.
- இது 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக விளங்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில், 5 ஆண்டு காலத்திற்கு ரூ.11.80 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 01.04.2023-ம் ஆண்டு முதல் 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி (மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.744.99 கோடி) மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாக விரைவு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்பட உள்ளது.
- தற்போது, நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்களிப்புடன், 1952.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இத்திட்டம் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.1261 கோடி மதிப்பீட்டில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இது 2023-24-ம் ஆண்டு முதல் 2025-2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது.
- இதில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
- இதைத் தொடர்ந்து வெற்றி யாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
- இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் மோதின. நிர்ணயிக்கப் பட்ட 60 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதில் பஞ்சாப் அணி 9-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் அந்த அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். பட்டம் வென்ற அந்த அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது.