28th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - 47 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வென்றது இத்தாலி
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி ஸ்பெயினில் உள்ள மலாகா நகரில் நடைபெற்றது. பட்டம் வெல்வதற்கான இந்த ஆட்டத்தில் இத்தாலி - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரினை எதிர்த்து விளையாடினார். இதில் மேட்டியோ அர்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.
- 2-வது ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர்,ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த மோதலில் 2-0 என வெற்றி பெற்ற இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. டேவிஸ் கோப்பை தொடரில் இத்தாலி 47 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பட்டம் வென்றுள்ளது.
- கடைசியாக இத்தாலி 1976-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. இதற்கு முன்னர் 3 முறையும், 1976-ம் ஆண்டுக்கு பின்னர் 3 முறையும் இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இதில் 3 முறை ஆஸ்திரேலியாவிடமே இத்தாலி தோல்வி கண்டிருந்தது.
- 'இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி'யின் 'அமைச்சகம் மற்றும் துறை' பிரிவில் சிறந்த செயல்பாட்டிற்காக ஆயுஷ் அமைச்சகத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மொத்தம் 18 புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை ஆயுஷ் அரங்கில் காட்சிப்படுத்தின.
- ஆயுஷ் உணவுமுறை, புதுமையான ஆயுஷ் தயாரிப்புகள், யோகா தெரபி வகுப்புகள், மனோபாவம் மற்றும் இயற்கை சோதனை, மருத்துவ ஆலோசனை, படைப்பாற்றல் விளையாட்டுகள், கற்றல் ஆகியவை முக்கிய கவனத்தை ஈர்த்தன.
- ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம், சோவா-ரிக்பா முறைகள் குறித்து பார்வையாளர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
- ஆயுஷ் அரங்கில், ஆயுஷ் துறையில் இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
- இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 'அமைச்சகங்கள் மற்றும் துறைகள்' பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு 'இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு' தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
- ஆயுஷ்-தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, மொத்தம் 18 ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் புதிய தயாரிப்புகளுடன் அரங்கில் காட்சிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
- 15 பி நான்கு திட்டத்தில் 3-வது திட்டமான ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 இம்பால் சேவையை 2023, நவம்பர் 28, அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பைரேன் சிங் முன்னிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
- காங்லா அரண்மனை, 'காங்லா-சா' ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இம்பாலைத் தொடங்கிவைப்பது இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்காக தியாகம் செய்த மணிப்பூர் மக்களுக்குச் செய்யும் உரிய மரியாதையாகும்.
- முகடு வடிவமைப்பு இடதுபுறத்தில் காங்லா அரண்மனையையும், வலதுபுறத்தில் 'காங்லா-சா'-வையும் சித்தரிக்கிறது. காங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று, தொல்லியல் தளமாகும்.
- டிராகன் தலை மற்றும் சிங்கத்தின் உடலுடன், 'காங்லா-சா' மணிப்பூர் வரலாற்றில் ஒரு புராண உயிரினமாகும். மேலும் இது அதன் மக்களின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்படுகிறது. 'காங்லா-சா' மணிப்பூரின் மாநிலச் சின்னமாகும்.
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரத்திற்கான 19-வது செயற்குழுவை 2023 நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை நடத்துகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
- இது உலகெங்கிலும் உள்ள சூரை மீன்வளத் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான கூட்டமாகும்.
- இக்கூட்டத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறை இணைச் செயலாளர் திருமதி நீது குமாரி பிரசாத், மகாராஷ்டிர அரசின் மீன்வளத் துறை ஆணையர் திரு அதுல் பட்னே ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இந்தோனேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள், சீஷெல்ஸ், தான்சானியா, ஈரான், தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, ஓமன், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்கின்றனர்.
- இது தவிர, பல்வேறு நாடுகள், ஐ.ஓ.டி.சி மற்றும் அறிவியல் அமைப்புகளைச் சேர்ந்த பல பங்கேற்பாளர்கள் மெய்நிகர் பயன்முறையிலும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
- இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து 2023 டிசம்பர் 4 முதல் 8 வரை இதே இடத்தில் நடைபெறும் ஐ.ஓ.டி.சி.யின் முக்கிய அறிவியல் குழுக் கூட்டம், இந்தியப் பெருங்கடலில் உள்ள சூரை மீன் மற்றும் சூரை போன்ற உயிரினங்களின் நிலையான மேலாண்மை தொடர்பான அறிவியல் பரிந்துரைகளுக்காக டபிள்யூ.பி.டி.சி.எஸ் மற்றும் பல்வேறு பணிக்குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலிக்கும்.
- சூரை மீன்கள், ஷீலா மீன்கள், சுறா மீன்கள், திருக்கை மீன்கள் போன்ற பிற பெரிய மீன் இனங்கள் மகத்தான பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. சூரை மீன்கள் மட்டும் ஆண்டுக்கு 41 பில்லியன் அமெரிக்க டாலர் (2018 ஆம் ஆண்டில்) வர்த்தகத்திற்கு பங்களிக்கின்றன.