5th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கப் பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், உயர்கல்வி போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸில் 350 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையம். தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் 7 தீவிர சிகிச்சை பிரிவுகள், ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்தை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
- ஐ.ஐ.டி ஜோத்பூர் வளாகத்தையும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அர்ப்பணித்தார். பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 145 கி.மீ தொலைவிலான தேகானா-ராய் கா பாக் மற்றும் 58 கி.மீ தொலைவிலான தேகானா-குச்சமான் நகர ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட மேலும் இரண்டு ரயில் திட்டங்களை அர்ப்பணித்தார்.
- ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் ருனிச்சா எக்ஸ்பிரஸ், மார்வார் சந்திப்பு - காம்ப்ளி பகுதியை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகிய இரண்டு புதிய ரயில் சேவைகளை ராஜஸ்தானில் திரு மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12வது நாளான இன்று, ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்று தந்துள்ளனர்.
- அதேபோல ஸ்குவாஷ், கலப்பு அணியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கமாகும். அதற்கு முன்னதாக ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் ஆகிய மூவரும் வில்வித்தையின் கலப்பு சுற்றில் தங்கப் பதக்கம் வென்றனர்.
- மறுபுறம், பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மலேசியாவின் லி ஜி ஜியாவை வீழ்த்தி ஹெச்.எஸ்.பிரணாய் இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
- ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் பாட்மிண்டனில் அரையிறுதியில் தோல்வியடையும் வீரர்கள் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது.
- 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 83 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 20 தங்கம் அடங்கும். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது தான் அதிகமான எண்ணிக்கையாக இருந்தது. இந்தமுறை அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்தியா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.